மருத்துவ விழிப்புணர்வு முகாம் மற்றும் மருத்துவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி
======================================
ஞாயிற்றுக்கிழமை (06-09-2015) காலை 10:30 மணியளவில் லால்பேட்டை அல்-பரகா ஆதம் மருத்துவமனையில் முன்னாள் ஜனாதிபதிகளின் இருதய நிபுணர் டாக்டர் ரஞ்சன் MD, DM அவர்கள், குழந்தை நல மருத்துவர் டாக்டர் மோகன், டாக்டர் சுமத்ரா, டாக்டர் ராகுல் மற்றும் டாக்டர் யூசுப் ஆகியோரின் மருத்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. 
-
அல்பரகா ஆதம் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு இலவசமாக இரத்தம் பரிசோதனை மற்றும் சிறுநீர் சார்ந்த பிரச்சனைகளுக்கான பரிசோதனைகள் இலவசமாக செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள். 


கேள்வி:
டாக்டர்!,  குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து பற்களை ப்ரஸிங் (Brushing) செய்வது??. என் குழந்தை Brushing செய்ய விருப்புவதில்லை.
என்ன செய்வது?
( Dr., when is the right time to start brushing for kids?? My kid doesn't like brushing at all..wat to do?? )
டாக்டர்.யூசுப் ஆதமின் பதில்கள்;
குழந்தைகளுக்கு பால் பற்கள்  (Milk teeth) பொதுவாக வயது 6 மாதங்கள் முதல் ஈறுகளில் வெளிப்படும். இது ஒவ்வொரு குழந்தைகள் மத்தியில் வேறுப்படும், என்றாலும் 20 பால் பற்கள் அனைத்தும் 6 மாதம் முதல்  3 ஆண்டுகளுக்கு இடையில் வர வேண்டும். உங்கள் குழந்தை 6 மற்றும் 11 வயது வரையிலான கட்டத்தில் தான் அவர்களின் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் (Permanent teeth) வரும். 20 பால் பற்கள் விழுந்து 20 நிரந்தர பற்கள் வருவதுமில்லாமல் புதிதாக 12 கடைவாய் பற்கள் (Molar teeth) வரும் ஆக மொத்தம் 32 நிரந்தர பற்கள் (Permanent teeth). இதில் கடைசியாக வரும் permanent.teeth தான் அறிவு பற்கள் (Wisdom teeth) என்பார்கள்.
பற்கள் துலக்குதல் (Tooth Brushing for kids) :
              குழந்தைகளின் வாயில் எப்பொழுது இருந்து பற்கள் வெளிப்படுகிறதோ அக்கட்டத்திலிருந்து சுமார் 2 1/2 வயது அல்லது 3 வயது  வரை மென்மையான துணி அல்லது Gauge Pad (இது பார்மஸியில் கிடைக்கும்) இவற்றைக்கொண்டு குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் இவர்கள் தான் குழந்தையின் பற்களையும், ஈறு மேடுகளையும் சுத்தம் செய்யவேண்டும். இவ்வயதில் இருந்தே தான் அவர்கள் Oral Hygiene பற்றி கவலைப்படவேண்டும். பல் துலக்கவேண்டும் என நிர்ப்பந்திக்ககூடாது.
         பிறகு 3 வயதாகும் பொழுது மென்மையான டூத் ப்ரஸை (Soft kids tooth brush) மற்றும் Kids டூத் பேஸ்ட் ( Kids tooth paste) வைக்கொண்டு பெற்றோர்கள் தான் குழந்தையின் பற்களை காலையிலும், இரவிலும் பற்களை துலக்க ( Teeth brushing) வேண்டும் மேலும் கற்றுக்கொடுக்கவேண்டும். இவ்வாறு 6 மாதங்கள் அல்லது ஒரு வருடம் செய்த பிறகு குழந்தையின் நான்கு வயது முதல் காலையில் குழந்தையை பற்களை துலக்க (Brushing) தானாகவே செய்யக்கூறவேண்டும், சில மாதம் இரவில் பெற்றோர் தன் குழந்தைக்கு Brushing செய்யனும். இவ்வாறாக Step by step செய்தால் எந்த குழந்தையும் பற்களை துலக்க Brushing செய்ய பிரச்சனை செய்ய மாட்டார்கள்.

Child oral hygienic maintainance. (குழந்தைகளின் பல் சுத்தம் மற்றும் பராமரிப்புகள்) இதை  தனியாக பதிக்கிறேன்.




ஹிப்னாஸிஸ் (HYPNOSIS) ஓர் அறிமுகம்:

ஹிப்னாஸிஸ் (Hypnosis) என்பது ஓர் உளவியல் சார்ந்த சிகிச்சை முறை, இதன் மூலம் உள்ளம் சார்ந்த பிரச்சனைகள் (psychological), உணர்ச்சிகள்(emotional),  மற்றும் சில உடல் ரீதியான பிரச்சினைகளை (physical problems) சமாளிக்க உதவும். இது மனதை கட்டுப்பாடுத்தக்கூடியதும் (mind-control) இல்லை, மூளை சலவை (brain-washing) செய்யக்கூடியதும் இல்லை, தூக்கம்(Sleep), அல்லது விசித்திரமான மாற்றங்கள், மாயங்கள், கண்கட்டி வித்தைகள் போன்ற எந்த நிகழ்வுகளும் கிடையாது.

பொதுவாக திரைப்படங்களும், நாவல்களிலும், கதைகளிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் ஹிப்னாஸிஸை பற்றி தவறாகவும் மிகவும் அதிகப்படுத்தியும் சித்திரப்படுத்தியுள்ளனர். இன்று அதிக Authorities இதை அதிகப்படியான இட்டுக்கட்டப்பட்ட விஷயங்கள் என ஏற்றுக்கொள்கின்றன. மேலே கூறப்பட்ட போல் இது MIND CONTROLகளும் கிடையாது, மாயஜலங்களும் இல்லை. யாருடைய இரகசியங்களும் அவர்களின் அனுமதி இன்றி பெறமுடியாது. இது பற்றி பல உளவுதுறைகள், பல அரசாங்க காவல் துறைகள், ராணுவத்தினர்கள் இந்த ஹிப்னாடிஸ் முறையை பயன்படுத்தி குற்றவாளிகளிடம் உண்மையை பெற முனைத்ததில் தோல்விதான் கிடைத்தது. அதற்கான ஆதாரம் அதிகம். இது இயற்கைக்கு மாற்றமான முறை கிடையாது. இதில் ஜின்கள், பேய்களின் வேலையும் கிடையாது. ஹிப்னாஸிஸ் (Hypnosis), ஒரு இயற்கை மற்றும் பாதிப்பில்லாத மனதின் நிலை தான். இதில் அந்த மனிதனுக்கு தான் ஹிப்னாஸிஸ் செய்யப்பட்டுள்ளோம் என்பது விளங்கும், அதே சமயத்தில் அவர் விரும்புகிற போது ஹிப்னாஸிஸ் (Hypnosis) நிலையில் இருந்து வெளியே வர முடியும்.

நாம் அன்றாட வாழ்வில் நம்மை அறியாமலேயே ஹிப்னாஸிஸ் நிலைகளுக்கு சென்று வருகிறோம்
உதாரணமாக...
# பகல் கனவு
# வாகனங்களை அதிக நேரங்கள் ஓட்டுதல்
# மிகவும் பிடித்த புத்தகங்களுடனோ அல்லது நாவலில் மன ஒன்றுதல்.
# கம்பியூட்டர் கேம் விளையாடுதல்
# டீவி/சினிமா பார்த்தல்
# இணையம்/பேஸ்புக்
# விளையாடும் சமயம்
# பிடித்த இசை/பாடல் கேட்கும் பொழுது.


மேலும் வசிக்க ....
http://www.dryousufadam.com/Self-hypnosis/

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

இந்த ஐந்து கேள்விகள், பத்து பதில்கள், இதில் பல இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளை மறைத்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் தன்னுள் ஓர் வரலாறு வைத்துள்ளது. கேள்விகளில் இருந்து உண்மை வரலாற்று நிகழ்வுகளை அறியவேண்டும் என்பதற்காகவே இவை இங்கு பதியப்படுகிறது. இக்கேள்விகளில் கூறப்பட்ட அல்லது சொல்லப்படாத வரலாற்று நிகழ்வுகளையும் நீங்கள் Commentல் கூறலாம்.

கேள்விகள்:

(1) , இருவர் நபிதோழர்கள் ஒரே ஆண்டில் முஸ்லிம் ஆனார்கள், ஒருவர் வில் எறிவதில் வீரர், மற்றொருவர் வால் சுழற்றுவதில் வல்லவர். இருவரும் குறைசி குலத்தை சார்ந்தவர்கள். ஒருவர் நபி(ஸல்)அவர்களுக்கு நெருங்கிய உறவினர். இருவரும் பகிரங்கமாக ஹிஜ்ரத் செய்தார்கள், ஒருவர் நபி(ஸல்) இறப்பதற்கு முன் மரணித்தார், மற்றொருவர் நபி(ஸல்)அவர்களுக்கு பின் மரணித்தார். அந்த இரு நபிதோழர்கள் யார் யார்?

(2), இரு அறிஞர்கள், இருவரும் நபி(ஸல்)அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்கள், இருவர்களின் பெயரை கேட்கும் சமயம் நாம் அவர்களுக்கு ஸலாம் கூறுவோம், ஆனால் இருவரும் நபி அல்ல. ஒருவர் பனு இஸ்ராயில் நபிமார்களுடன் தொடர்பு உடையவர், மற்றவர் அரசாட்சியை விட கல்வி ஞானத்தை தேர்ந்தேடுத்தவர். இருவர்களை பற்றி திருகுர்ஆனில் கூறப்பட்டுள்ளது அந்த இரு அறிஞர்கள் யார் யார்?

(3), இருவர்கள் அறுக்கப்படவேண்டியவர்கள், ஆனால் அறுக்கப்படவில்லை அவர்களுக்கு பகரமாக பிராணிகள் அறுக்கப்பட்டது. அவ்விருவர்களும் நபி(ஸல்)அவர்களுடன் தொடர்புள்ளவர்கள். இருவரும் ஸஹாபிகள் கிடையாது. இருவரும் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள். அவ்விருவரும் நபி(ஸல்)அவர்கள் முன் மரணமடைந்துவிட்டர்கள் அந்த இருவர் யார் யார்?

(4), இரண்டு இமாம்கள்(அறிஞர்கள்) இருவரும் ஹிஜ்ரி 100விற்கு பின் பிறந்தவர்கள், ஒருவர் அன்சாரி ஸஹாபி அவர்களின் வமிசத்தில் வந்தவர், மற்றவர் ஈராக் பிரதேசத்தில் பிறந்தவர்கள். இருவரும் இரு முக்கிய இமாம்களின் மாணவர்கள். ஆனால் ஒரு இமாமின் சட்டத்திட்டத்தையே(FIQH) உலகுக்கு பரப்பினார்கள், இருவரில் ஒருவரிடம் ஒரு முக்கிய இமாம் அவர்கள் சில விசயங்களை கற்றார்கள்; மற்றவர்களிடம் மற்றொரு முக்கிய இமாம் மார்க்க விசயங்களை கற்றார்கள். இருவரும் அப்பாஸி மன்னர் ஹாருன் அல்ரஷித் அவர்களால் காஜி(நிதிபதி)யாக நியமிக்கப்பட்டார்கள். அந்த இரு இமாம்கள்(அறிஞர்கள்) யார் யார், அவர்களின் பெயர்கள் என்ன?
(முக்கிய இமாம்கள் என்பது நான்கு முக்கிய சட்டநுனுக்கங்கள்(Fiqh) கலையை தொகுத்தவர்கள்)

(5), இரு நபர்கள், ஒருவர் பனு இஸ்ராயில் சமுதாயத்தின் மிக முக்கியமான நபி ஆவர், மற்றவர் அல்லாஹ்வின் நபி அல்ல. அல்லாஹ்வின் கட்டளை படி இருவரும் பல ஆண்டுகள் பயணம் செய்து ஒரு அறிஞரை பார்க்க சென்றார்கள். அந்த அறிஞரும் நபி அல்ல, அந்த அறிஞரை சந்தித்த அந்த நபிக்கு பல தர்பித்துகள் கிடைத்தது. இந்த சம்பவம் திரு குர்ஆனில் செல்லப்பட்டு இருக்கிறது. அறிஞரும் பனு இஸ்ராயில் சமுகத்தை சார்ந்தவரல்ல. யார் அந்த இரு நபர், அவ்வருவர்களின் பெயர் என்ன?

பதில்கள்:

(1), இருவர் நபிதோழர்கள் ஒரே ஆண்டில் முஸ்லிம் ஆனார்கள், ஒருவர் வில் எறிவதில் வீரர், மற்றொருவர் வால் சுழற்றுவதில் வல்லவர். இருவரும் குறைசி குலத்தை சார்ந்தவர்கள். ஒருவர் நபி(ஸல்)அவர்களுக்கு நெருங்கிய உறவினர். இருவரும் பகிரங்கமாக ஹிஜ்ரத் செய்தார்கள், ஒருவர் நபி(ஸல்) இறப்பதற்கு முன் மரணித்தார், மற்றொருவர் நபி(ஸல்)அவர்களுக்கு பின் மரணித்தார். அந்த இரு நபிதோழர்கள் யார் யார்?

பதில்கள்:
1, ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலீப்(ரழி)
2, உமர் இப்னு ஹத்தாப் (ரழி)

நபி(ஸல்) அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்த சில ஆண்டுகள் நபி அவர்கள் இரகசியமாகவே இஸ்லாமிய பிரச்சாரப்பணி செய்து வந்தார்கள். பல எதிர்ப்புகள், பிரச்சனைகள் மத்தியில் அல்லாஹ் காட்டிய இறைப்பணி செய்தார்கள்.

நபிப்பட்டம் கிடைத்த 6-ம் ஆண்டு உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். அந்த வருடமே நபி(ஸல்)அவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களும் இஸ்லாத்தை ஏற்றார்கள். வாளுக்கு உமர் ரழி என்றால், வில்லுக்கு ஹம்ஸா ரழி அவர்கள்.

இருவரும் இஸ்லாம் ஏற்றபிறகு தான் பகிரங்கமாக முஸ்லிம்கள் இரு வரிசையாக காபாவிற்கு சென்று தொழுதார்கள். ஒரு வரிசை முன் உமர் ரலி வும்., மற்றொன்றுக்கு ஹம்ஸா ரலி யும் இருந்தார்கள்.  உஹது யுத்தத்தில் ஹம்ஸா (ரழி) அவர்கள் வீரமரணமடைந்தார். உமர் (ரழி)அவர்கள் பிற்காலத்தில் கலிபாவாக ஆனார்கள்.

(2) இரு அறிஞர்கள், இருவரும் நபி(ஸல்)அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்கள், இருவர்களின் பெயரை கேட்கும் சமயம் நாம் அவர்களுக்கு ஸலாம் கூறுவோம், ஆனால் இருவரும் நபி அல்ல. ஒருவர் பனு இஸ்ராயில் நபிமார்களுடன் தொடர்பு உடையவர், மற்றவர் அரசாட்சியை விட கல்வி ஞானத்தை தேர்ந்தேடுத்தவர். இருவர்களை பற்றி திருகுர்ஆனில் கூறப்பட்டுள்ளது அந்த இரு அறிஞர்கள் யார் யார்?

பதில்கள்:
1, கிள்ரு (அலை),
2, லுக்மான் (அலை),

விளக்கம்:
"சூரா காஃப்F" வில் அல்லாஹ் கிள்ரு(அலை) அவர்களை பற்றி கூறுகிறான். இவர் அல்லாஹ்வின் ஞானம் பெற்றவர். இவர் நபியாக அனுப்பபடவில்லை. இவர்களிடம் பனு இஸ்ராயில் நபியாக முஸா (அலை) அவர்களை தர்பியத்திற்காக அனுப்பிவைத்தான்.
அடுத்ததாக, "சூரா லுக்மான்" என்ற சூராவில் ஹக்கீம் லுக்மான் (அலை) அவர்களை பற்றி அல்லாஹ் கூறுகிறான். இவர் அரசாட்சி கிடைப்பதை விட கல்வி ஞானத்தை தேர்ந்ததேடுத்தார்கள். இவர்கள் தன் மகனுக்கு செய்யும் அறிவுரையே அல்லாஹ் இந்த சூராவில் கூறுகிறான். அது முழு மனித குலத்திற்கே பொருந்தக்கூடியது.

(3), இருவர்கள் அறுக்கப்படவேண்டியவர்கள், ஆனால் அறுக்கப்படவில்லை அவர்களுக்கு பகரமாக பிராணிகள் அறுக்கப்பட்டது. அவ்விருவர்களும் நபி(ஸல்)அவர்களுடன் தொடர்புள்ளவர்கள். இருவரும் ஸஹாபிகள் கிடையாது. இருவரும் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள். அவ்விருவரும் நபி(ஸல்)அவர்கள் முன் மரணமடைந்துவிட்டர்கள் அந்த இருவர் யார் யார்?

பதில்கள்:
1, நபி இஸ்மாயில்(அலை) அவர்கள்,
2, அப்துல்லா இப்னு அப்துல் முத்தலீப் ( நபி(ஸல்) அவர்கள் தந்தை)

விளக்கம்:
அனைவரும் அறிந்ததே நபி இப்ராஹிம் (அலை) அவர்கள,  தன் மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் பலியிட அல்லாஹ் கட்டளையிட்டதை, அவ்விருவரும் தியாகத்திற்கு தயாராகிவிட்டார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களின் தியாகத்தை ஏற்றுக்கொண்டு அவ்விடத்தில் ஆட்டை குர்பானி செய்தார்கள். அதையே நாம் தியாகப்பெருநாளாக நினைவு கூறுகிறோம்.

நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன் நபியின் பாட்டனார் அப்துல் முத்தலீப் ஒரு முக்கிய காரியங்களுக்காக தன் மகன்களில் ஒருவரை பலியிட நேர்ச்சை செய்து இருந்தார்கள். அவ்விதமே நேர்ச்சையை செய்ய முடிவு செய்து காபாவில் தன் மகன்களுடன் ஒன்று கூடி சீட்டு போட்டு பார்த்ததில் நபியின் தந்தை அப்துல்லாவின் பெயர் வந்தது. அது சமயம் அப்துல்லா அவர்கள் எல்லாரின் பாசத்தையும், அன்பையும் பெற்று இருந்தார்கள். பல ஆலோசனைகளின் பெயரில் கடைசியாக நூறு ஒட்டகம் பலியிட்டு அப்துல் முத்தலீப் தன் நேர்ச்சையை பூர்த்தி செய்தார்.

(4), இரண்டு இமாம்கள்(அறிஞர்கள்) இருவரும் ஹிஜ்ரி 100விற்கு பின் பிறந்தவர்கள்,  ஒருவர் அன்சாரி ஸஹாபி அவர்களின் வமிசத்தில் வந்தவர், மற்றவர் ஈராக் பிரதேசத்தில் பிறந்தவர்கள்.  இருவரும் இரு முக்கிய இமாம்களின் மாணவர்கள். ஆனால் ஒரு இமாமின் சட்டத்திட்டத்தையே(FIQH) உலகுக்கு பரப்பினார்கள், இருவரில் ஒருவரிடம் ஒரு முக்கிய இமாம் அவர்கள் சில விசயங்களை கற்றார்கள்; மற்றவர்களிடம் மற்றொரு முக்கிய இமாம் மார்க்க விசயங்களை கற்றார்கள். இருவரும் அப்பாஸி மன்னர் ஹாருன் அல்ரஷித் அவர்களால் காஜி(நிதிபதி)யாக நியமிக்கப்பட்டார்கள். அந்த இரு இமாம்கள்(அறிஞர்கள்) யார் யார், அவர்களின் பெயர்கள் என்ன?
(முக்கிய இமாம்கள் என்பது நான்கு முக்கிய சட்டநுனுக்கங்களை(Fiqh) தொகுத்தவர்கள்)

பதில்கள்:
1, இமாம் அபு யூசுப்
(ஹி 113 - ஹி 182)

2, இமாம் முஹம்மது
(ஹி135-ஹி 189)

இருவரும் இமாம் அபுஹனிபா(ரஹ்) அவர்களின் மாணவர்கள், இருவரும் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களிடமிருந்து ஹதிஸ் அல் முஹத்தா கிரந்தத்தை படித்தார்கள்.

இமாம் அபுயூசுப் அவர்கள் அன்சாரி ஸஹாபி ஸஹது(ரழி)அவர்களின் வமிசவழியில் வந்தவர்கள். இவர்களிடம் இமாம் அஹமது இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் இவர்களிடம் சில காலம் கல்வி கற்றார்கள்.

இமாம் முஹம்மது, இவர்கள் ஈராக் நாட்டில் பிறந்தார்கள், இவர்களிடம் இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் மார்க்ககல்வியை கற்றார்கள்.

இருவரும் இமாம் அபுஹனிபா (ரஹ்) அவர்களின் பிக்ஹ் சட்டங்களை பின்பற்றினார்கள்.

இருவரும் வெவ்வேறு சூழ்நிலையில் மன்னர் ஹாருன் அல்ரஷீத் அவர்களின் தலைமை காஜி-நிதிபதியாக இருந்தார்கள்.

This information has been obtained and adapted from the english translation of "Sirat-i-Numan" by Allamah Shibli Nu'mani translated by M. Hadi Hussain.

(5), இரு நபர்கள், ஒருவர் பனு இஸ்ராயில் சமுதாயத்தின் மிக முக்கியமான நபி ஆவர், மற்றவர் அல்லாஹ்வின் நபி அல்ல. அல்லாஹ்வின் கட்டளை படி  இருவரும் பல ஆண்டுகள் பயணம் செய்து ஒரு அறிஞரை பார்க்க சென்றார்கள். அந்த அறிஞரும் நபி அல்ல, அந்த அறிஞரை சந்தித்த அந்த நபிக்கு பல தர்பித்துகள் கிடைத்தது. இந்த சம்பவம் திரு குர்ஆனில் செல்லப்பட்டு இருக்கிறது. அறிஞரும் பனு இஸ்ராயில் சமுகத்தை சார்ந்தவரல்ல. யார் அந்த இரு நபர், அவ்வருவர்களின் பெயர் என்ன?
( பின்குறிப்பு: அறிஞர் பெயர் என்வென்று தேவை என்றால் Commentல் செல்லப்படும்)

பதில்கள்
1, நபி முஸா (அலை)
2, அவர்களின் பணியாள்  யூஷவு இப்னு நூன்

விளக்கம்:
இக்கேள்வி "சூரா காஃப்F" அத்தியாயத்தில் நபி முஸா (அலை) அவர்கள், கிள்ரு(அலை) அவர்களை அல்லாஹ்வின் கட்டளைப்படி சென்றது  அடிப்படையில் கேட்கப்பட்டது. நபி முஸா (அலை) அவர்களுடன் அவர்களின் பணியாள் யூஷவு இப்னு நூன் அவர்கள் சென்றார்கள். அவர்கள் பல மைல்கள் தூரம் சென்றதாக சில அறிவிப்புகள் கூறுகிறது. Morocco நாட்டிலுள்ள இரு கடல்கள் சேருமிடத்திற்கு சென்றதாக சில இஸ்லாமிய வரலாற்று நூற்களில் காணப்படுகிறது.






இது சமீபத்தில் சவுதி அரேபியாவில் empty quarter என்ற காலியான   
அரேபிய பாலைவனத்தில் தென்கிழக்கு பகுதியில் தற்போது எரிவாயு சம்மந்தமான வேலைகள் Aramco கம்பேனிகள் மூலம் நடைப்பெறுகிறது. அவர்கள் அவ்விடங்களில் பாலைவனத்தை தோண்டும் சமயம் கண்டு எடுக்கப்பட்ட மனித உடல் எலும்புகள் இவை. இமை ரகசியமாகவே சவுதி அரசாங்கம் வைத்துள்ளது. மார்க்க உலமாக்கள் இது ஆது கூட்டத்தினரின் எலும்பாக இருக்கலாம் என கூறுகிறார்கள்.

ஆது கூட்டத்துனர் அரபி பேசக்கூடிய மக்கள்கள் இவர்கள் அரேபிய தீபகற்பத்தில் தென் பகுதியில் வாழ்த்து வந்த கூட்டத்தினர். அல்லாஹ் இவர்களுக்கு ஹூது (அலை) அவர்களை நபியாக ஆக்கினன், இவர்கள் அவர்களை பொய்யாக்கினர்கள். ஆது கூட்டத்தினரை பலசாலியாகவும், உயரகமாகவும் அல்லாஹ் படைத்தான், அவர்கள் நபியை பொய்ப்படுத்தினர் மற்றும் பல சிலைகளை கடவுளாக வணங்கினார்கள். அல்லாஹ் அவர்களை வேரோடு அழித்தான். 

அல்லாஹ் குர்ஆனில் ஸூரத்துல் அஃராஃப்(சிகரங்கள்) ஆது கூட்டத்துனரை பற்றி பின்வருமாறு கூறுகிறான்.

7:65. இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?” என்று கேட்டார்.ِ

7:66. அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள், (அவரை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்” என்று கூறினார்கள்.
َ
7:67. அதற்கு அவர்? “என் சமூகத்தாரே! எந்த மடமையும் என்னிடம் இல்லை - மாறாக, அகிலங்களின் இறைவனாகிய - (அல்லாஹ்வின்) தூதன் ஆவேன்” என்று கூறினார்.
ٌ
7:68. “நான் என் இறைவனுடைய தூதையே உங்களிடம் எடுத்துக் கூறுகின்றேன். மேலும் நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன்” (என்று கூறினார்).

7:69. “உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிக மாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” (என்றும் கூறினார்).

7:70. அதற்கு அவர்கள் “ எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்” என்று கூறினார்கள்.

7:71. அதற்கு அவர், “உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன; அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
َ
7:72. ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம்.


பொதுவாக குளிர்காலங்களில் நோய் கிருமிகளின் தாக்குதல் அதிகமாவே இருக்கும். இவற்றால் நம் தொண்டையின் பாதிப்பு அதிகமே!!! தொண்டையில் புண் (Sore throat) வரும். பின் நமக்கு பிரச்சனையே. அதற்காக அடிக்கடி ஆங்கில மருந்துகளை வாங்கி சாப்பிடுவதால் மேலும் பல பிரச்சனைகள் வரும். ஆகையால் இதற்காக கவலைப்படாதீர்கள். உடனடி நிவாரணம் இதோ தயார்!!!!

நிவாரண மருந்து செய்யும் முறை:
----------------------------------
தேவையான பொருட்கள்:
1), இரண்டு எலுமிச்சை பழங்கள் (Lemon)
2), இரண்டு விரல்கள் அளவு இஞ்சி (Ginger)- (ஆள்க்கட்டி விரல்,நடுவிரல் போன்று)
3), ஒரு கப் அளவு சுத்தமான தேன் (ஒரு கப் என்பது 225ml, அதிக தேன் இருந்தாலும் பிரச்சனை இல்லை)
4), 300ml கொள்ளலவு அளவு உள்ள காலி ஒரு ஜார் ( 300ml capacity Jar)

செய்முறை:
-------------
1), முதலில் எலுமிச்சை பழத்தையும், இஞ்சியையும் நன்றாக சுத்தம் செய்யவேண்டும்.
2), பிறகு இஞ்சியை Coin போல் சிறிதாக வெட்டவேண்டும்.
3), எலுமிச்சை பழத்தையும் மெல்லிய Slice ஆக வெட்டவேண்டும்
4), பின்னர் 300ml கொள்ளலவு அளவு உள்ள காலி ஜாரில் ( 300ml capacity Jar) வெட்டப்பட்ட எலுமிச்சை, இஞ்சி எடுத்துக்கொள்ளுங்கள்,
5), பின்னர் எலுமிச்சை, இஞ்சி இவற்றின் மீது தேனை நன்றாக ஊற்றுங்கள்.
6), மேலும் தேனால் எலுமிச்சை பழமும், இஞ்சியும் நன்றாக ஊற வேண்டும், இடைவெளி இல்லாமலும், அவற்றை தேன் முழுவதும் மூடி இருக்கும் அளவு தேன் இருக்கவேண்டும்.
7), பின்னர் ஜாரை(JAR) மூடி பிரிஜில் (fridge) வையுங்கள்.
8), Jelly போன்று ஆகிவிட்ட பின் பயன்படுத்தலாம்.
9), இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:
----------------------
பிரிஜில்(Fridge) வைக்கப்பட்ட Jellyபோன்று இருக்கும் மருந்திலிருந்து ஒரு ஸ்பூன் (Spoon) மருந்தை எடுத்து தம்ளரில் வையுங்கள், பின்னர் நன்றாக கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். பிறகு அதை நன்றாக கலக்குங்கள். இப்போது குடியுங்கள். உங்கள் "தொண்டைப்புண்"சரியாகி விடும். நன்றாக பேசுங்கள்.
(குறிப்பு: சுடு தண்ணீரில் தேன் கலந்து குடித்தால், உடல் பருமன் குறைyuயும்- Note this beauty tips)
Powered by Blogger.